search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெகன்மோகன் ரெட்டி"

    • அரசியல்வாதியாக மாறிய நடிகர் புரிந்து கொள்ள வேண்டும்.
    • ஜெகன் மோகன் ரெட்டி மக்களின் அன்பையும் புகழையும் பெற்று முதல் மந்திரியாக ஆகிவிட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா விசாகப்பட்டினத்தில் பேட்டி அளித்தார்.

    ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் வருகிற தேர்தலில் வெற்றி பெற போவதில்லை என்பதை உணர்ந்து விரக்தியில் இருக்கிறார். சத்தம் போட்டு கத்தி கூச்சிலிடுவதால் ஓட்டு கிடைக்காது.

    இதனை அரசியல்வாதியாக மாறிய நடிகர் புரிந்து கொள்ள வேண்டும். பவன் கல்யாணின் விரக்தி அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் கூச்சல் போடும் அளவிற்கு சென்று விட்டது.

    அவரது தோல்விகளுக்கு தொண்டர்களை குறை கூறுவது வெட்கக்கேடானது.

    தற்போது பூத்துக் கமிட்டி இல்லாதது குறித்து அவர் பேசி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார் என்று தெரியவில்லை. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்காக பவன் கல்யாண் வேலை செய்து வருகிறார். முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தங்கள் கட்சிகளை தோற்றுவித்தனர்.

    ஜெகன் மோகன் ரெட்டி மக்களின் அன்பையும் புகழையும் பெற்று முதல் மந்திரியாக ஆகிவிட்டார். ஆனால் பவன் கல்யாண் 2 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியவில்லை.

    ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியை மீண்டும் முதல் மந்திரியாக தேர்வு செய்ய மக்கள் தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை எடுக்கவில்லை.
    • நாங்கள் பயங்கரவாதிகளா அல்லது சமூக விரோதிகளா? எங்களை ஏன் தடுக்கப் பார்க்கிறார்கள்.

    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அரசு தீர்க்க கோரி ஆந்திர மாநில காங்கிரஸ் சார்பில் இன்று ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி தலைமையில் மாநில அரசின் தலைமை செயலக அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டத்தை தடுக்க முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் இருந்து வெளியே வராதபடி வீட்டு முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் வீட்டுக்காவலை தவிர்க்கும் முயற்சியாக ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி நேற்று இரவு விஜயவாடாவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் படுத்து உறங்கினார்.


    இதுகுறித்து விஜயவாடாவில் உள்ள ஆந்திர ரத்னா பவனில் ஒய்.எஸ்.ஷர்மிளா கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளில் இளைஞர்கள், வேலையில்லாதோர் மற்றும் மாணவர்களின் முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை எடுக்கவில்லை. அதில் அவர் முற்றிலும் தோல்வியடைந்து விட்டார். வேலையற்றோர் சார்பாக நாங்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தால், எங்களை வீட்டுக் காவலில் வைக்க முயற்சி செய்வது கண்டிக்கதக்கது. ஜனநாயகத்தில் போராட்டம் நடத்த எங்களுக்கு உரிமை இல்லையா? இது வெட்கக்கேடானது. ஒரு பெண்ணாக நான் வீட்டுக் காவலை தவிர்க்க காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாங்கள் பயங்கரவாதிகளா அல்லது சமூக விரோதிகளா? எங்களை ஏன் தடுக்கப் பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடிக்கு, திருப்பதி வெங்கடாசலபதி மாதிரி சிலையை ஆந்திர முதல்வர் வழங்கினார்.
    • ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு.

    ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி இன்று காலை டெல்லிக்கு சென்றார்.

    டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துள்ளார்.

    சந்திப்பின்போது, திருப்பதி வெங்கடாசலபதி மாதிரி சிலையை பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் வழங்கினார்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ள நிலையில், தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரையும் ஜெகன்மோகன் ரெட்டி சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

    • பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
    • மத்திய பா.ஜனதா அரசுக்கு ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் அதற்காக தயாராகி வருகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இதற்கிடையே ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

    அப்போது கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்த சந்திப்பு ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் ஆந்திர முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி இன்று காலை டெல்லிக்கு சென்றார். பிரதமர் மோடியை சந்திப்பதற்காக பாராளுமன்றத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி சென்றார். அவரை ஆந்திர எம்.பி.க்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.

    இதைத் தொடர்ந்து மத்திய மந்திரி அமித்ஷாவை ஜெகன்மோகன் ரெட்டி இன்று சந்திதது பேசுகிறார். தேர்தல் கூட்டணி மற்றும் ஆதரவு குறித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

    சந்திரபாபு நாயுடுவின் டெல்லி பயணத்துக்கு மறுநாளே ஜெகன்மோகன் ரெட்டியும் அங்கு சென்று பா.ஜனதா தலைவர்களை சந்திக்க உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

    மத்திய பா.ஜனதா அரசுக்கு ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். ஜனாதிபதி தேர்தல் மற்றும் மசோதாக்கள் நிறைவேற்றுவதில் அவரது கட்சி ஆதரவு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெகன்மோகன் ரெட்டியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.
    • சர்மிளா போன்றவர்கள் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்துக்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா தடா அருகே சுற்றுலா விடுதிகளைத் திறந்து வைத்தார்.

    ஓங்கோலு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட போவதாக வதந்தி பரப்பி வருகின்றனர். ஆனால், தொடர்ந்து 2 முறை தனக்கு ஆதரவளித்த நகரி சட்டமன்றத் தொகுதியில் இந்த முறையும் போட்டியிடுவேன்.

    ஆரம்பத்தில் சீட் கிடைக்காது என்றார்கள். இப்போது வேறு எங்காவது சென்று போட்டியிடுவேன் என்று வேறு ஒரு கதையை உருவாக்கிவிட்டார்கள்.

    ஜெகன்மோகன் ரெட்டியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.

    சந்திரபாபு நாயுடு, நாரா லோகேஷ், பவன் கல்யாண், சர்மிளா போன்றவர்கள் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்துக்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார்.
    • சமத்துவம், சமூக நீதியின் அடையாளம் என்பதால் 'சமூக நீதி'க்கான சிலை என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அமராவதி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை 125 அடி உயரம் கொண்டது. இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.

    இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், நீரூற்றுகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.

    இச்சிலை சமத்துவம், சமூக நீதியின் அடையாளம் என்பதால் 'சமூக நீதி'க்கான சிலை என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • அம்பதி ராயுடு கடந்த மாதம் 28-ந்தேதிதான் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர். கட்சியில் இணைந்தார்.
    • கட்சியில் இணைந்த 10 தினங்களிலேயே அம்பதிராயுடு விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அமராவதி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு. 2019-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வுபெற்றார். ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார். கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். சீசனுடன் அவர் ஓய்வுபெற்றார்.

    ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஓய்வு பெற்றவுடனேயே அம்பதிராயுடு ஆந்திர முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போதே அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இணைய உள்ளார் என்று கூறப்பட்டது.

    ஆனால் அவர் கடந்த மாதம் 28-ந்தேதிதான் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர். கட்சியில் இணைந்தார்.

    இந்தநிலையில் அம்பதி ராயுடு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகினார். கட்சியில் இணைந்த 10 தினங்களிலேயே அம்பதிராயுடு விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இருந்து விலகவும், அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த நடவடிக்கை குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அம்பதி ராயுடு கூறியுள்ளார்.

    • ஒய்.எஸ்.ஷர்மிளா தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
    • ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஆந்திரபிரதேச அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வருகிறார். இதையடுத்து, கடந்த நவம்பர் 3-ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "தெலுங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. தேர்தலில் வாக்குகள் பிளவுபடுவதைத் தடுக்க காங்கிரஸுக்கு எனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளேன். கேசிஆர் மற்றும் அவரது கூட்டாளிகளின் பெரும் ஊழலால், ஒரு பணக்கார மாநிலம் இப்போது பெரும் கடனில் சுமையில் சிக்கியுள்ளது" என கூறியிருந்தார்.

    அதனை தொடர்ந்து, ஐதராபாத்தில் ஜனவரி 2-ம் தேதி நடைபெற்ற கட்சிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஒய்எஸ் ஷர்மிளா, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை நேரில் சந்தித்து முக்கியமான அறிவிப்பை வெளியிடுவோம் என்று தெரிவித்திருந்தார்

    இந்நிலையில், டெல்லி சென்ற ஒய்எஸ் ஷர்மிளா, ஜனவரி 4-ம் தேதி அகில இந்தியா காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

    இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன், ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஆந்திரபிரதேச அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அம்பதி ராயுடு இந்திய கிரிக்கெட் அணி சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார்.
    • ஐ.பி.எல். போட்டியில் கடைசியாக சென்னை அணியில் விளையாடினார்.

    திருப்பதி:

    ஆந்திராவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு. இவர் இந்திய கிரிக்கெட் அணி சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். மேலும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணியில் விளையாடினார். இந்த நிலையில் நேற்று அம்பதி ராயுடு முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் முகாம் அலுவலகத்திற்கு வந்தார்.

    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி,துணை முதல் மந்திரி நாராயணசாமி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அம்பதி ராயுடுவுக்கு முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் இணைந்ததற்கான அடையாள அட்டை வழங்கினார்.

    • திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதன் மூலம் மக்களுக்கு மேலும் சேவை செய்ய பலம் கிடைக்கும்.
    • வருகிற 2024 சட்டமன்ற தேர்தலிலும் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

    இதில் நடிகையும் மந்திரியுமான ரோஜாவுக்கு மீண்டும் சீட் கிடைக்காது என எதிர்க்கட்சியினர் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கு ரோஜா பதிலடி கொடுத்துள்ளார்.

    நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரோஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதன் மூலம் மக்களுக்கு மேலும் சேவை செய்ய பலம் கிடைக்கும். ஆந்திர மாநில மக்கள் நலமடையவும், ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரி ஆக வேண்டும். அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.

    நான் கட்சி நிகழ்ச்சிகளிலும் அமைச்சரவை கூட்டங்களிலும் முன் வரிசையில் இருந்து வருகிறேன்.

    நகரி தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளேன். வருகிற 2024 சட்டமன்ற தேர்தலிலும் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருகின்றனர். அது பலிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சர்மிளா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் இந்த முறை ஆந்திராவில் தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
    • மாநிலத்தைப் பிரித்த காங்கிரசுக்கு ஆந்திர மாநிலத்தில் செல்வாக்கு குறைவாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

    திருப்பதி:

    காங்கிரஸ் கட்சி தென் மாநிலங்களில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

    கர்நாடகா, தெலுங்கானா மாநிலத்தைத் தொடர்ந்து ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    அந்த மாநிலத்தில் இன்னும் 6 மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இப்போது இருந்தே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை கட்சிகள் நடத்தி வருகின்றன.

    ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியுடன் நடிகர் பவன் கல்யாண் கூட்டணியை அறிவித்துள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி இந்த முறையும் தனித்தே போட்டியிடுவோம் என அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுமா? அல்லது தெலுங்கு தேசம் கட்சியுடன் இணையுமா என்பது புதிராக உள்ளது.

    ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான சர்மிளா ஜனவரி மாதம் முதல் வாரத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சர்மிளா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் இந்த முறை ஆந்திராவில் தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

    தெலுங்கானா மாநிலத்தில் கர்நாடக பார்முலாவான பெண்களுக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை, இலவச பஸ் பயணம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஆட்சியை பிடித்தது. அதேபோல ஆந்திராவிலும் வாக்குறுதிகளை அறிவிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    ஆனாலும் மாநிலத்தைப் பிரித்த காங்கிரசுக்கு ஆந்திர மாநிலத்தில் செல்வாக்கு குறைவாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

    இது ஒரு புறம் இருக்க ஆளுங்கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் நேற்று சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர். இது முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆந்திர அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    • வரும் 2024 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறுவது உறுதி.
    • ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் போட்டி போட்டு சாதிக்க வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மந்திரி ரோஜா காக்கிநாடா மாவட்டம் சமல் கோட்டில் உள்ள சாளுக்கிய குமார ராம பீமேஸ்வர சாமி கோவிலில் தரிசனம் செய்தார்.

    இதையடுத்து ராஜ நகரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கி வைத்தார்.

    வரும் 2024 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறுவது உறுதி.

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் தோல்வி அடைவார்கள். தோல்வி அடைந்த பிறகு இருவரும் மனநல கோளாறுகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும்.

    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரியாக வர வேண்டும் என்பதற்காக சாமியிடம் பிரார்த்தனை செய்தேன்.

    ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் போட்டி போட்டு சாதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×